ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அந்நாளில், மத்திய அரசு சார்பில் கல்வி பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம் ஆகும். அதன்படி, இந்த ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்படக்கூடிய தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடுமுழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றினை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேசிய நல்லாசிரியர் விருதுக்கான இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.சி சரஸ்வதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் திலீப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மேலும், இவையின்றி சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இரண்டு பேருக்கும் மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.